sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நலத்திட்ட உதவிகள் கவர்கிறது அ.தி.மு.க.,

/

நலத்திட்ட உதவிகள் கவர்கிறது அ.தி.மு.க.,

நலத்திட்ட உதவிகள் கவர்கிறது அ.தி.மு.க.,

நலத்திட்ட உதவிகள் கவர்கிறது அ.தி.மு.க.,


ADDED : பிப் 18, 2024 02:49 AM

Google News

ADDED : பிப் 18, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த, 2011 முதல், ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை, நலத்திட்ட உதவி வழங்கி அ.தி.மு.க.,வினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். தற்போது, லோக்சபா தேர்தல் நெருங்குவதால், இந்தாண்டு நலத்திட்ட உதவி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட மூன்று சட்டசபை தொகுதிகளிலும், 7,600 நபர்களுக்கு, சேலை, சமையல் பாத்திரம் உள்ளிட்ட நல உதவி வழங்கி, பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் வாக்காளர்களை ஈர்க்க முடியும் என்று நம்புகின்றனர்.

அ.தி.மு.க., திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், 24ம் தேதி தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அரிசிக்கடை வீதியிலும், 27ம் தேதி, காங்கயத்திலும், முன்னாள் முதல்வர் ஜெ., வின், 76வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது.

வரும், 25ம் தேதி, தலைமை நிலைய செயலாளர் வேலுமணி தலைமையில், திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட, அங்கேரிபாளையத்திலும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ பேச்சாளர்கள், மணிமேகலை, ஜெய

சீலன், கோவை புரட்சித்தம்பி, குன்னத்துார் கோவிந்தராஜ், எழு

மலை, கோபி ஆகியோர் பொதுக்கூட்டங்களில் பேச உள்ளனர்.

தற்போது தெருமுனைப் பிரசாரக்கூட்டங்கள் நடக்கின்றன. இதில் பங்கேற்ற பொள்ளாச்சி ஜெயராமன், 'ஆளும் கட்சியான தி.மு.க.,வினரின் மோசமான செயல்பாடுகளைச் சுட்டிக்காட்ட, மக்களைச் சந்திக்க தெருமுனைக்கு வந்திருக்கிறோம்' என்று விளாசினார்.






      Dinamalar
      Follow us