ADDED : ஜூலை 24, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; வேளாண் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஷீலா பூசலட்சுமி உள்பட வேளாண் அதிகாரிகள் பங்கேற்றனர். தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகம், விதை சான்று, பட்டு வளர்ச்சித்துறை சார்ந்து, மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.