sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நெல் சாகுபடி விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்

/

நெல் சாகுபடி விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்

நெல் சாகுபடி விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்

நெல் சாகுபடி விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்


ADDED : நவ 10, 2025 11:46 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: மடத்துக்குளம் வட்டாரத்தில், சம்பா பருவ நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வரும், 15ம் தேதிக்குள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:

அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், மடத்துக்குளம் வட்டாரத்தில், சம்பா பருவத்தில், கடத்துார், கணியூர், சோழமாதேவி, கண்ணாடிபுத்துார், காரத்தொழுவு, துங்காவி, பாப்பான்குளம், குமரலிங்கம் உள்ளிட்ட கிராமங்களில், 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளுக்கு, நிதி உதவி வழங்கிடவும், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்க செய்யும் வகையில், பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நெல்லுக்கு பயிர்க்காப்பீடு செய்ய, நவ.,15 இறுதி நாளாக உள்ள நிலையில், மடத்துக்குளம் வட்டாரத்திலுள்ள விவசாயிகள், பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு, ரூ.496.98 செலுத்தி, உடனடியாக பயிர்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொது இ- சேவை மையங்களில் தனிநபர் ஆதார் அட்டை, சிட்டா, நடப்பாண்டு பசலி அடங்கல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் பயிர் காப்பீட்டுக்கு பதிவு செய்யலாம்.

இவ்வாறு, தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us