/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அ.தி.மு.க. கவுன்சிலரின் கணவர் போக்சோவில் கைது
/
அ.தி.மு.க. கவுன்சிலரின் கணவர் போக்சோவில் கைது
ADDED : அக் 29, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசியில், 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அ.தி.மு.க. கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டார்.
அவிநாசி நகராட்சி, 12வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலரின் கணவர் ராஜேந்திரன், 51. இவர் 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவரின் பெற்றோர் அவிநாசி அனைத்து மகளிர் போலீசிடம் புகார் அளித்தனர்.
விசாரணை செய்த அவிநாசி மகளிர் போலீசார் ராஜேந்திரனை 'போக்சோ' பிரிவில் கைது செய்து திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதியின் உத்தரவின்பேரில், அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

