sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இளைஞர், மாணவர் சேர்க்கை; தீவிரப்படுத்துகிறது அ.தி.மு.க.,

/

இளைஞர், மாணவர் சேர்க்கை; தீவிரப்படுத்துகிறது அ.தி.மு.க.,

இளைஞர், மாணவர் சேர்க்கை; தீவிரப்படுத்துகிறது அ.தி.மு.க.,

இளைஞர், மாணவர் சேர்க்கை; தீவிரப்படுத்துகிறது அ.தி.மு.க.,


ADDED : ஜூன் 30, 2025 12:28 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.

எம்.எல்.ஏ., விஜய குமார், முன்னாள் எம்,எல்.ஏ., நடராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:

ஓட்டுச்சாவடியில், 1,200க்கும் அதிகமான வாக்காளர் இருந்தால், பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது; அதற்கு தயாராக இருக்க வேண்டும். பாக கிளை அளவில், இளம் தலைமுறை விளையாட்டு அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணி, மாணவர் அணிக்கு உறுப்பினர் சேர்க்கை நடக்க வேண்டும்.

சார்பு அணிகளும், வீடு வீடாக சென்று, தி.மு.க., ஆட்சியின் பாதிப்புகளை விளக்கிப் பேச வேண்டும். வரும், 10 நாட்களுக்குள், சார்பு அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, பட்டியல் தலைமைக்கு அனுப்ப வேண்டும்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், பகுதி மற்றும் கிளை அளவில், கூட்டங்கள் நடத்தி, ஆலோசிக்க வேண்டும். பகுதி செயலாளர்கள், வாரந்தோறும் கிளை செயலாளர்களை சந்திக்க வேண்டும். மகளிர் அணியினர், கட்சி கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us