ADDED : ஏப் 21, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைச்சர் பொன்முடியை கண்டித்து, திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில், தாராபுரம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மகளிர் அணி செயலாளர் ரேவதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பொன்முடியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென கோஷ மிடப்பட்டது.

