sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இணைப்பு வழங்கியும் குழாயில் 'காற்று'

/

இணைப்பு வழங்கியும் குழாயில் 'காற்று'

இணைப்பு வழங்கியும் குழாயில் 'காற்று'

இணைப்பு வழங்கியும் குழாயில் 'காற்று'


ADDED : ஜூன் 02, 2025 11:53 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : குடிநீர் இணைப்பு வழங்கியும், சப்ளை செய்யப்படாமல் இருப்பதால், தண்ணீரை, 500 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தி வருவதாக, இடுவாய் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது இடுவாய் ஊராட்சி சின்னக்காளிபாளையம். அங்குள்ள செந்தில்நகர் பகுதியில், 150க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. அப்பகுதி மக்களுக்கு, நீண்ட நாட்களாக குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது.

தெருக்குழாய் மூலமாக, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் நடந்து வந்தது. கூட்டுக்குடிநீர் திட்டம் வந்த பிறகு, புதிய குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.

குடிநீர் இணைப்பு கொடுத்ததும், தெருக்குழாய்கள் மூடப்பட்டன. இருப்பினும், வீட்டு இணைப்பில் குடிநீர் வழங்காமல், ஊராட்சி நிர்வாகம் இழுத்தடித்து வருவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இதுதொடர்பாக முறையிட்டனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஊராட்சி பணியாளர்கள் எங்கள் பகுதிக்கு வந்து குப்பை வாங்குவதே இல்லை. நீண்ட தொலைவு சென்று, குப்பை கொட்ட வேண்டியுள்ளது.

குடிநீர் இணைப்பு வழங்கியும், வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதில்லை. இதன்காரணமாக, 2 ஆயிரம் லிட்டர் தண்ணீரை, 500 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். விரைவில், குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us