ADDED : மே 06, 2025 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் வடக்கு மாநகர பகுதியில் இருந்து, அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 40 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நேற்று 15 வேலம்பாளையம் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது.
வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தினேஷ் குமார், வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.