sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இந்தியாவை வல்லரசாக்கும் 'அமிர்த காலம்' திட்டம்; புதிய வழிகாட்டி ஆலோசகர்கள் நியமனம்

/

இந்தியாவை வல்லரசாக்கும் 'அமிர்த காலம்' திட்டம்; புதிய வழிகாட்டி ஆலோசகர்கள் நியமனம்

இந்தியாவை வல்லரசாக்கும் 'அமிர்த காலம்' திட்டம்; புதிய வழிகாட்டி ஆலோசகர்கள் நியமனம்

இந்தியாவை வல்லரசாக்கும் 'அமிர்த காலம்' திட்டம்; புதிய வழிகாட்டி ஆலோசகர்கள் நியமனம்


ADDED : ஜூன் 09, 2025 11:37 PM

Google News

ADDED : ஜூன் 09, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'அமிர்த காலம்' திட்டத்துக்கு வழிகாட்டி ஆலோசகர்களை, மத்திய அரசு நியமித்துள்ளது.

வரும், 2047ம் ஆண்டில், வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற நிலையை உருவாக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய காலம், 'அமிர்த காலம்' என அழைக்கப்படுகிறது.

கடந்த, 3 ஆண்டுக்கு முன் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, அதற்கான பயிற்சி, சுயசார்பு பொருளாதாரம், இந்திய கலாசார பாதுகாப்பு, வறுமையில்லா இந்தியா மற்றும் அனைவருக்கும் கல்வி ஆகியவற்றை இலக்காக கொண்டு 'அமிர்த காலம்' திட்டம் செயல்பட உள்ளது. 2047ம் ஆண்டுக்குள் இந்த இலக்குகள் தன்னிறைவு செய்யப்படும் போது, இந்தியா, வல்லரசு என்ற நிலையை எட்டும் என, மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. இதற்கென நாடு முழுக்க, வழிகாட்டி ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறுகையில், ''அமிர்த காலம் திட்டத்துக்கு நாடு முழுக்க, 500 வழிகாட்டி ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டத்தின் இலக்குகளை கிராமப்புற மக்கள் மத்தியில் கூடுதலாக கொண்டு செல்ல வேண்டியுள்ளது; அதற்கான முயற்சியை வழிகாட்டி ஆலோசகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us