/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தங்க நகை பறித்த வழக்கு: அப்பீல் மனு தள்ளுபடி
/
தங்க நகை பறித்த வழக்கு: அப்பீல் மனு தள்ளுபடி
ADDED : நவ 08, 2025 11:56 PM
திருப்பூர்: திருப்பூரில் சிறுமியிடம் தங்க செயின் பறித்த சம்பவத்தில் தண்டனை விதிக்கப்பட்டவரின் அப்பீல் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.
திருப்பூர், மங்கலம் ரோடு, கே.வி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் முகமது பீர்சுல்தான், 46. கடந்த 2023ம் ஆண்டில், குமரப்பபுரம் 3வது வீதியில், ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியின் கவனத்தை திருப்பி, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினைப் பறித்துக் கொண்டு தப்பினார்.
இது குறித்து சிறுமியின் தாய், தெற்கு போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார், இதில் ஈடுபட்ட முகமது பீர் சுல்தானைக் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கில், ஜே.எம்.எண்: 1 கோர்ட்டில் கடந்த 2024ல் தீர்ப்பளிக்கப்பட்டது. செயின் பறிப்பில் ஈடுபட்ட அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக, மேல் முறையீடு செய்யப்பட்டது. இம் மனு, திருப்பூர் மாவட்ட எஸ்.சி.- எஸ்.டி. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சுரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார். விசாரித்த நீதிபதி, அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து, ஜே.எம். கோர்ட் விதித்த தண்டனையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டார்.

