sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரோட்டில் வீசப்பட்ட பொருட்கள் கேரளாவிலிருந்து வந்த கழிவுகளா?

/

ரோட்டில் வீசப்பட்ட பொருட்கள் கேரளாவிலிருந்து வந்த கழிவுகளா?

ரோட்டில் வீசப்பட்ட பொருட்கள் கேரளாவிலிருந்து வந்த கழிவுகளா?

ரோட்டில் வீசப்பட்ட பொருட்கள் கேரளாவிலிருந்து வந்த கழிவுகளா?


ADDED : ஜன 14, 2025 03:54 AM

Google News

ADDED : ஜன 14, 2025 03:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கொச்சி செல்லும் ரோடுகள் கேரள மாநிலத்தை இணைக்கின்றன.

இவ்வழியாக, கன்டெய்னர்கள், சரக்கு வேன்கள், கனரக வாகனங்கள், லாரிகள் உள்ளிட்டவை அதிகளவில் சென்று வருகின்றன. பல்லடம் - பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், ஆள் அரவமற்ற காட்டு பகுதிகளில், ஏராளமான கழிவுகள், குப்பை கொட்டப்பட்டுள்ளன.

பல்லடம் --------- பொள்ளாச்சி ரோடு, புளியம்பட்டி பிரிவு அருகே, காலாவதியான பாக்கெட் உணவு பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்டவை குவியலாக ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ளன. அரிசி, பருப்பு, எண்ணெய், ஊறுகாய் பாட்டில்கள், அப்பளம், பிஸ்கட் பாக்கெட்டுகள், பொரி உள்ளிட்ட ஏராளமான உணவு பொருட்கள், தின்பண்டங்கள் குவியலாக வீசப்பட்டுள்ளன.

இவை, 2022, 23ம் ஆண்டிலேயே காலாவதி ஆனதாக தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. வியாபாரம் செய்பவர்கள் யாரேனும் இவற்றை வீசி சென்றனரா அல்லது கேரள மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கழிவுகளா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ரோட்டோரத்தில் குவியலாக வீசப்பட்டுள்ள இந்த உணவு பொருட்களை, இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். சிலர், இவற்றிலுள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட கெடாத பொருட்களை எடுத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us