sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீபாவளி சீட்டு ரூ.1 கோடி சுருட்டியவர் கைது

/

தீபாவளி சீட்டு ரூ.1 கோடி சுருட்டியவர் கைது

தீபாவளி சீட்டு ரூ.1 கோடி சுருட்டியவர் கைது

தீபாவளி சீட்டு ரூ.1 கோடி சுருட்டியவர் கைது


ADDED : அக் 28, 2024 01:25 AM

Google News

ADDED : அக் 28, 2024 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை, சத்யா காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார், 45. கருமாரம்பாளையத்தில், 'ஸ்ரீ பரமேஸ்வரா குரூப்ஸ்' என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில், வாராந்திர சீட்டு, ஏலச்சீட்டு, பலகார சீட்டு என, பல சீட்டு நடத்தினார்.

அப்பகுதி மக்கள், சீட்டில் சேர்ந்து வாரம் மற்றும் மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தனர். தீபாவளி சீட்டு முதிர்வடைந்த நிலையில், பணம் செலுத்தியவர்களுக்கு முதிர்வு தொகையை திருப்பி தரவில்லை.

செந்தில்குமார் தலைமறைவானார். ஏமாந்தவர்கள், கடந்த வாரம், ஊத்துக்குளி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்; திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

விசாரணையில், நுாற்றுக்கும் மேற்பட்டோரிடம், 1 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து ஏமாற்றியது தெரிந்தது.

திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, செந்தில்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us