/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயற்கை அவயம் 38 பேருக்கு அளவீடு
/
செயற்கை அவயம் 38 பேருக்கு அளவீடு
ADDED : பிப் 10, 2025 07:33 AM

திருப்பூர், : திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு சார்பில், மங்கலம் ரோடு, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் செயற்கை அவயம் அளவீடு முகாம் நேற்று நடந்தது. விண்ணப்பித்திருந்த, 38 நபர்களுக்கு அளவீடு செய்யப்பட்டது. அதே மண்டபத்தில், பூச்சக்காடு தம்பி நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில், இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடந்தது. சக் ஷம் மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், பழனிசாமி பொன்னம்மாள் அறக்கட்டளை நிறுவனர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர், தி ஐ பவுண்டேஷன் மருத்துவக் குழுவினர், 21 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டு, பத்து பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கும், ஆறு பேர் உயர் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டனர். துளசிபார்மஸி உதவியுடன், 34 நபர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.