நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், : திருப்பூர் மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் அறிக்கை:
திருப்பூர், குமார் நகர் மின் வாரிய அலுவலகத்தில் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறை கேட்பு நிகழ்ச்சி, நாளை (16ம் தேதி) காலை 11:00 மணிக்கு, நடைபெறுகிறது. மின் நுகர்வோர், மின் வாரியம் தொடர்பான தங்கள் குறைகளை இதில் தெரிவித்து தீர்வு காணலாம்.

