ADDED : ஜன 11, 2024 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : அவிநாசி ைஹவே போலீஸ் ரோந்து வாகன டிரைவர் வரத ராஜன், 39. இவர் நேற்று முன்தினம் இரவு, டியூட்டி முடிந்து, நம்பியூருக்கு சென்று கொண்டிருந்தார்.
போத்தம்பாளையம் பகுதியில் டூவீலரில் வந்த ஒருவர், வரதராஜனின் வாகனத்தின் மீது மோதுவது போல் வந்துள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு, அந்நபர் வரதராஜனை தாக்கினார். காயமடைந்த அவர், அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்குப்பதிவு செய்து, போலீஸ்காரரை தாக்கிய போத்தம்பாளையத்தை சேர்ந்த துரைசாமி மகன் சவுந்திரராஜன், 45 என்பவரை கைது செய்தனர்.