sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அத்திக்கடவு - அவிநாசி திட்ட செயல்பாடு பவானி பாசன விவசாயிகள் புதிய கோரிக்கை

/

அத்திக்கடவு - அவிநாசி திட்ட செயல்பாடு பவானி பாசன விவசாயிகள் புதிய கோரிக்கை

அத்திக்கடவு - அவிநாசி திட்ட செயல்பாடு பவானி பாசன விவசாயிகள் புதிய கோரிக்கை

அத்திக்கடவு - அவிநாசி திட்ட செயல்பாடு பவானி பாசன விவசாயிகள் புதிய கோரிக்கை


ADDED : பிப் 15, 2024 09:19 PM

Google News

ADDED : பிப் 15, 2024 09:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:'அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் விதிமுறைகளை வரையறை செய்ய வேண்டும்; பெயர் மாற்ற வேண்டும்' என, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் நிறைவு பெற்று, செயல்பாட்டுக்கு வரும் நிலையை எட்டியிருக்கிறது.

பவானி ஆற்று நீரை மையமாக வைத்து, காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் நீரை, நீரேற்று நிலையங்கள் வாயிலாக 'பம்ப்' செயது, மூன்று மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 1,045 குளம், குட்டைகளுக்கு நிரப்புவதே திட்டம்.

இந்நிலையில், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு அனுப்பியுள்ள கடிதம்:

பவானிசாகர் அணையில் இருந்து, 95 கி.மீ., கடந்து வரும் பவானி நதி, அத்திக்கடவு - அவிநாசி நீரேற்று நிலையம் வந்தடைகிறது.

இந்த நதிக்கரையின் வடக்கு பகுதியில் உள்ள அடர் வனப்பகுதியில் உள்ள பெரிய குளம், தண்ணீர் பந்தல் ஏரி, ஆப்பக்கூடல் ஏரி போன்றவற்றின் உபரிநீர் மற்றும் வனத்தில் உள்ள ஓடைகளின் வழியே வரும் நீர் ஆகியவை தான், அக்., - நவ., மாதங்களில் பாசன தேவை போக, காலிங்கராயன் அணையை தாண்டி, உபரியாக வெளியேறுகிறது; இந்த உபரி நீரை மட்டுமே, அத்திக் கடவு திட்டத்திற்கு எடுக்க முடியும்.

இவ்வழித்தடத்தில் வரும் உபரி நீரை, பவானி நதி, காவிரியோடு கலக்கின்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள அத்திக்கடவு திட்ட நீரேற்று நிலையத்தில் இருந்து, இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள குளங்களுக்கு, 1.5 டி.எம்.சி., தண்ணீரை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, 'காலிங்கராயன் அணைக்கட்டு பகுதி - அத்திக்கடவு உபரி நீரேற்று திட்டம்' என, பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

'விதிமுறை வகுக்க வேண்டும்'


கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு, பவானிசாகர் அணையின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு கீழே பவானி நதியில் உற்பத்தியாகும் நீரில், சட்டப் படியான உரிமை நீர் என்பது கிடையாது; நீர் பற்றாக்குறை காலத்தில் கொடுக்கப்படுகின்ற உயிர் நீர் என்பதும் கிடையாது; இது, சட்டப்படியான ஆயக்கட்டு பாசன திட்டமும் அல்ல. மாறாக, உபரிநீர் திட்டம் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாசன கட்டமைப்புகளின் சட்டங்களை உள்வாங்கி, விதிமுறை வகுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us