ADDED : பிப் 20, 2025 05:50 AM

அ நிறம் | அளவு
திருப்பூர், கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா நடந்தது.
பள்ளிக்கு இடத்தை தானமாக வழங்கிய க.சுப்ரமணியம் செட்டியார் வாழ்ந்த காந்தி நிலையம் இல்லத்தில் இருந்து நினைவு ஜோதியை பள்ளி மாணவர்கள் எடுத்துவந்து ஆசிரியர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது, க.சுப்ரமணியம் செட்டியாரின் மகனும், டி.எஸ்.கந்தசாமி செட்டியாரின் தத்து மகனுமான மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது மனைவி உடனிருந்தனர்.
