/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துங்காவி பிரிவு அலுவலக மின்நுகர்வோர் கவனத்துக்கு
/
துங்காவி பிரிவு அலுவலக மின்நுகர்வோர் கவனத்துக்கு
துங்காவி பிரிவு அலுவலக மின்நுகர்வோர் கவனத்துக்கு
துங்காவி பிரிவு அலுவலக மின்நுகர்வோர் கவனத்துக்கு
ADDED : நவ 28, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: துங்காவி பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மின்நுகர்வோருக்கு, மின் கணக்கீடு தொடர்பாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
உடுமலை கோட்டம், துங்காவி பிரிவு அலுவலத்துக்கு உட்பட்ட 003-வெங்கிட்டாபுரம் பகிர்மான மின் இணைப்புகள்( மின் கணக்கீடு செய்யப்பட்டவை தவிர்த்து), நிர்வாக காரணங்களால், நவ., 2025 மாத மின் கணக்கீடு செய்யவில்லை.
ஆகவே, மேற்படி பகிர்மான மின்நுகர்வோர்கள் செப்., 2025 மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே நவ., 2025 மாதத்துக்கும் செலுத்த வேண்டும். இந்த தகவலை உடுமலை மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

