sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தாறுமாறாக ஓடிய கார் வாலிபர்களுக்கு 'கவனிப்பு'

/

தாறுமாறாக ஓடிய கார் வாலிபர்களுக்கு 'கவனிப்பு'

தாறுமாறாக ஓடிய கார் வாலிபர்களுக்கு 'கவனிப்பு'

தாறுமாறாக ஓடிய கார் வாலிபர்களுக்கு 'கவனிப்பு'


ADDED : மார் 29, 2025 06:28 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம் : கோவையில் உள்ள ஒரு கல்லுாரியில் பயின்று வரும் மாணவர்கள் மூன்றுபேர் நேற்று மாலை கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி காரில் சென்றனர். காரை தாறுமாறாக ஓட்டி, அம்மாபாளையத்தில், இருவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றனர்.

இதனை பார்த்து ஆவேசமடைந்த பொதுமக்கள் காரை விரட்டி சென்றனர். அதில், காந்தி நகர் பகுதியில், மற்றொரு கார் மீது மோதி நின்றது. விரட்டி வந்தவர்கள், காரில் இருந்தவர்களை நன்றாக 'கவனித்து' அனுப்பர்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், திருப்பூர் வளையங்காட்டை சேர்ந்த சீனிவாசன், 21, கோத்தகிரியை சேர்ந்த ஜெயசூர்யா, 22, ஸ்ரீநிவாசா தியேட்டர் பகுதியை சேர்ந்த ஜெயவர்தன், 20, என தெரிய வந்தது. மூவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us