ADDED : பிப் 25, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:பொங்கலுார், என்.என்., புதுாரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 45; ஆட்டோ டிரைவர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பொங்கலுார் சுங்கச்சாவடி அருகே சென்ற போது, ஆட்டோ கவிழ்ந்ததில் உயிரிழந்தார்.
வாய்க்காலில் குதித்தவர் பலி
பொங்கலுாரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 47. நீண்ட நாளாக உடல் நலம் சரியில்லாததால், வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவரது உடல் பொங்கலுார் அருகேயுள்ள பி.ஏ.பி., வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்டது. இரு வழக்குகளையும் அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.