/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை திருப்பதி கோவிலில் 27ல் அவதார உற்சவம் துவக்கம்
/
உடுமலை திருப்பதி கோவிலில் 27ல் அவதார உற்சவம் துவக்கம்
உடுமலை திருப்பதி கோவிலில் 27ல் அவதார உற்சவம் துவக்கம்
உடுமலை திருப்பதி கோவிலில் 27ல் அவதார உற்சவம் துவக்கம்
ADDED : ஜூன் 24, 2025 10:26 PM
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், ஏழாம் வருடாரம்ப அவதார உற்சவம், வரும், 27ல் துவங்குகிறது.
இந்த உற்சவம், வரும் 27ம் தேதி காலை, 7:00 மணிக்கு மேல், விஷ்வக்ேஷனர், லட்சுமி ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி பெருமாள், கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் திருமஞ்சனத்துடன் துவங்குகிறது.
காலை, 8:30 மணிக்கு மேல், புற்றுக்கோவிலில் இருந்து பால் குடம் புறப்படுதல், ரேணுகாதேவி திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை, 4:30 மணி முதல், 6:30 மணி வரை, ஸ்ரீ பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் திருமஞ்சனம் நடக்கிறது. வரும், 28ம் தேதி, 7ம் ஆண்டு அவதார உற்சவம் நடக்கிறது. அன்று காலை, 7:00 மணி முதல் ேஹாமம், நவகலச ஸ்தாபிதம், வேங்கடேச பெருமாள் மூலவர் உற்சவர் திருமஞ்சனம் நடக்கிறது.