ADDED : பிப் 13, 2024 01:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;அவிநாசியில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அவிநாசி அரசு கலைக்கல்லுாரியில் நடந்த இந்நிகழ்ச்சியில், என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். முன்தாக விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சக்திவேல், மாவட்ட நலக்கல்வியாளர் துணை இயக்குனர் ராஜ்குமார், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் பாஸ்கரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன், சுகாதார ஆய்வாளர் பரமன், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் தாரணி உட்பட பலர் பங்கேற்றனர்.