/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
கல்லுாரி மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 26, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் மாணவிகளுக்கான தொலை தொடர்பு சார்ந்த விழிப்புணர்வு மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம், கல்லுாரி கலையரங்கில் நடந்தது.
நல்லுார் நுகர்வோர் நல மன்றம் மற்றும் கல்லுாரி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், நல்லுார் நுகர்வோர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், நுகர்வோரின் கடமைகள் குறித்து பேசினார்.
செயலாளர் வேல்முருகன், ரவி, கல்லுாரி முதல்வர் தமிழ்மலர், பேராசிரியர்கள் நளினி, சிவமணி, கவுரி, மோகன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.