sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தொழிற்சாலை, வீடுகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

/

தொழிற்சாலை, வீடுகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

தொழிற்சாலை, வீடுகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

தொழிற்சாலை, வீடுகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம்


ADDED : அக் 02, 2025 12:04 AM

Google News

ADDED : அக் 02, 2025 12:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை பகுதியிலுள்ள தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

தேவியரை தினமும் ஒவ்வொரு அம்சமாக வழிபடும் நவராத்திரி விழாவில் சிறப்பு அம்சமாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. உடுமலை பகுதிகளில், நுால் மில்கள், காகித ஆலைகள், கோழிப்பண்ணைகள் மற்றும் இயந்திர தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில், நேற்று ஆயுத பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இயந்திரங்கள், தொழிற்சாலை வளாகங்களை துாய்மைப்படுத்தி, கோலமிட்டும், அலங்கரிக்கும் பணிகள் நடந்தது.

ஆயுதபூஜையின் மங்கலப்பொருட்களாக, வாழைக்கன்று, மாவிலை தோரணங்கள் கட்டி, தொழில் வளம் சிறக்க வழிபட்டனர். வீடுகளிலும், வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அதே போல், கோவில்களிலும், ஆயுத பூஜையை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. அதே போல், கல்விக்கடவுளான சரஸ்வதியை வழிபடும், விஜயதசமி விழா இன்று கொண்டாடப்படுகிறது.






      Dinamalar
      Follow us