sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குளத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு திரண்டு வந்த பி.ஏ.பி., விவசாயிகள்

/

குளத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு திரண்டு வந்த பி.ஏ.பி., விவசாயிகள்

குளத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு திரண்டு வந்த பி.ஏ.பி., விவசாயிகள்

குளத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு திரண்டு வந்த பி.ஏ.பி., விவசாயிகள்


ADDED : ஏப் 10, 2025 10:20 PM

Google News

ADDED : ஏப் 10, 2025 10:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

உடுமலை ஆலாம்பாளையம் பூசாரி நாயக்கன் குளத்துக்கு தண்ணீர் திறக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும் என, பி.ஏ.பி., பாசன விவசாயிகளும், திருமூர்த்தி நீர் தேக்க திட்டக்குழு நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்கு, விவசாயிகள் 600 பேர் திரண்டுவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

உடுமலை அருகே, ஆலாம்பாளையத்தில், 76 ஏக்கர் பரப்பளவில் பூசாரி நாயக்கன் குளம் அமைந்துள்ளது. கடந்த 2012 ல், பி.ஏ.பி., துணை அமைப்பாக பூசாரி நாயக்கன் குளம் சேர்க்கப்பட்டது. குளத்துக்கு ஆண்டுக்கு 39.86 மில்லியன் கன அடி நீர் வழங்கவேண்டும் என்ற கோர்ட் உத்தரவும் உள்ளது.

நடப்பாண்டு இண்டாம் சுற்றாக, திருமூர்த்தி அணை பொது கால்வாய், 1.20 கி.மீ., ல் அமைந்துள்ள மானுப்பட்டி கிளை கால்வாய், 2.65 கி.மீ., ல் அமைந்துள்ள மதகு வழியாக, கடந்த 7ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு 20 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

பி.ஏ.பி.,ல் மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, ஐந்து சுற்றுகள் தண்ணீர் திறப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, கடந்த ஜன., 29 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

இன்னும் இரண்டு சுற்றுகள் கூட முடியாதநிலையில், உடுமலை பூசாரி நாயக்கன் குளத்துக்கு தண்ணீர் திறக்கக்கூடாது எனவும்; சட்டத்துக்கு புறம்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் சங்கங்கள் எதிர்ப்பு குரல் எழுப்பிவருகின்றன.

பி.ஏ.பி., பாசன விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்காக, மாவட்டம் முழுவதும் உள்ள பி.ஏ.பி., பாசன சங்கங்களின் பிரதிநிதிகள், 600 பேர், கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.

கலெக்டர் அலுவலக இரண்டாவது தளத்திலுள்ள கூட்ட அரங்கம் முழுவதும் விவசாய சங்கத்தினர் அமர்ந்திருந்தநிலையில், இருக்கைகள் பற்றாக்குறையால், ஏராளமானோர் தரையில் அமர்ந்திருந்தனர்.

பி.ஏ.பி., திருமூர்த்தி நீர் தேக்க திட்ட குழு தலைவர் பரமசிவம் தலைமையில், விவசாய சங்க பிரதிநிதிகள் பத்து பேரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பி.ஏ.பி., அதிகாரிகள் பங்கேற்றனர். கலெக்டர் கிறிஸ்துராஜ், விவசாய சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தைநடத்தினார்.

பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்துக்கு 5 சுற்று தண்ணீர் திறக்கவேண்டியநிலையில், இதுவரை 2 சுற்றுகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பூசாரி நாயக்கன் குளத்துக்கு தண்ணீர் திறந்தால், பி.ஏ.பி., பாசனத்தை நம்பியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். குளத்துக்கு தண்ணீர் திறக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும் என, விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us