ADDED : அக் 01, 2024 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : திருமுருகன்பூண்டி நகராட்சி, உமையஞ் செட்டிபாளையம் பகுதியில் சாலை வசதி, குடிநீருக்கான குழாய்கள் பதிப்பது, மின் கம்பிகள் இடம் மாற்றம் செய்து தருவது என அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென்று அப்பகுதி கவுன்சிலர் தேவராஜன் (மா.கம்யூ.,), நகராட்சி தலைவர் குமாரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து, நகராட்சி தலைவர் குமார், உமையஞ்செட்டிபாளையம் மற்றும் ராமநாதபுரம் பகுதியில் பார்வையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுத்து விரைவில், கோரிக்கை விடுக்கப்பட்ட வசதிகளை கொடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில், ராஜகுரு, மூர்த்தி, சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

