sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நலத்திட்ட உதவி பெற காத்திருப்பு; பசியால் வாடிய பயனாளிகள்

/

நலத்திட்ட உதவி பெற காத்திருப்பு; பசியால் வாடிய பயனாளிகள்

நலத்திட்ட உதவி பெற காத்திருப்பு; பசியால் வாடிய பயனாளிகள்

நலத்திட்ட உதவி பெற காத்திருப்பு; பசியால் வாடிய பயனாளிகள்


ADDED : ஆக 11, 2025 11:41 PM

Google News

ADDED : ஆக 11, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; முதல்வர் ஸ்டாலின் நேற்று உடுமலையில், அரசு விழாவில் பங்கேற்று, மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தாலுகா வாரியாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த தாலுகா பகுதியில் ஒரு இடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருப்பூர் தெற்கு தாலுகாவைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள், வித்யா கார்த்திக் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

இதற்காக நேற்று காலை 8:00 மணி முதலே பயனாளிகள் மண்டபத்துக்கு வந்து காத்திருக்கத் துவங்கினர்.

உடுமலையில் நடந்த விழாவில் நலத்திட்டஉதவிகளை முதல்வர் வழங்கி பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார்.

அதன்பின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டது. இதனால், நீண்ட நேரம் காத்திருந்த பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பலரும் பசியால் வாடியபடி காத்திருந்தனர்.






      Dinamalar
      Follow us