ADDED : பிப் 13, 2026 05:03 AM
திருப்பூர்: கேரளா மற்றும், தமிழகத்தில் இருந்து கோவை (போத்தனுார்), திருப்பூர் வழியாக பயணிப்போர் வசதிக்காக, திருவனந்த புரம் - பெங்களூரு நகரங்களை இணைக்க, வாராந்திர சிறப்பு ர ய ில்கள், கடந்த 2025 நவ. முதல் இயக்கப்பட்டு வருகிறது.
டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பதால், இவற்றின் இயக்கம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு தொடர்ந்து அதிகரிப்பதால், மூன்றாவது முறையாக மார்ச் வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, செவ்வாய்தோறும் இயங்கும் திருவனந்தபுரம் வடக்கு - பெங்களூரு வாராந்திர ரயில் இயக்கம் (எண்:06524) மார்ச் 31ம் தேதி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் திருவனந்தபுரம் வடக்கு - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்:06556) மார்ச் 29ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வியாழன்தோறும் இயங்கும் திருவனந்தபுரம் வடக்கு - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்:06548) மார்ச் 26ம் தேதி வரை தொடர்ந்து இயங்கும்.

