/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரியில் மைதானம் அமைக்க பூமி பூஜை
/
கல்லுாரியில் மைதானம் அமைக்க பூமி பூஜை
ADDED : ஜூலை 29, 2025 11:48 PM

திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரியில் மைதானம் அமைக்க பூமி பூஜை நடந்தது.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரியில் கால்பந்து, கைப்பந்து மற்றும் வலைகோல் பந்து மைதானம், பத்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. மைதானம் அமைக்க, மெஜஸ்டிக் கந்தசாமி, காருண்யா கார்மெண்ட்ஸ் கார்த்திகேயன், டெக்பா பிரின்டர்ஸ் ஸ்ரீகாந்த், கோகுல் நிட் பேப் மோகன்குமார், சவுபர்னிகா டெக்ஸ் செந்தில், சி.ஆர்., கார்மெண்ட்ஸ் முருகேஷ், எம்.எஸ்.கே., கிரியேசன் பத்மநாபன், கேங்கோ கார்மெண்ட்ஸ் ரமேஷ், பைரவ் நிட்ஸ் பிரகாஷ் ஆகியோர் நிதியுதவி அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.