/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகம்
/
பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகம்
ADDED : ஜன 30, 2026 07:17 AM
திருப்பூர்: முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காங்கயம் படியூர், நத்தக்காடையூர், கார்மெல் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு படிக்கும், 571 மாணவ, மாணவியருக்கு, 27.47 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில், நெல் கொள்முதல் செய்யும் பணி துவக்கி வைக்கப்பட்டது. மேலும், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மைய கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.
காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சார்பில், காலநிலை மாற்றம் சார்ந்து இளைய தலைமுறை மாணவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
இத்திட்டங்களை, அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார். காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், முத்துார் பேரூராட்சி தலைவர் சுந்தராம்பாள், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிவகுமாரி, டி.இ.ஓ., அருள்ஜோதி உட்பட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

