நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்:வேலம்பாளையம் பா.ஜ., மண்டல தலைவர் ராஜன், தலைமையில், மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகம் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின், உதவி கமிஷனரிடம் அளித்த மனு:
தொழில் நிறுவனங்களுக்கு, 2017 முதல் கூடுதலாக வரி விதித்து உள்ளனர். இதனால், வரி சுமை அதிகரித்து மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
வரியை குறைக்க பலமுறை மனு கொடுத்தும் மாநகராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, நிலுவையில் உள்ள வரியினங்களையும் உடனே செலுத்துமாறு கடுமையாக நடந்து கொள்கிறார்கள். மார்ச் மாதம் வரை கால அவகாசம் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

