/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசுக் கல்லுாரியில் ரத்ததான முகாம்
/
அரசுக் கல்லுாரியில் ரத்ததான முகாம்
ADDED : ஜூன் 15, 2025 04:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், உலக ரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு ரத்த தான முகாம் கல்லுாரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, 20 யூனிட் ரத்தம் வழங்கினர்.