நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியதோட்டம் கிளை சார்பில், ரத்த தான முகாம் நடந்தது.
குடியரசு தினவிழாவையொட்டி, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் தவ் ஹீத் ஜமாஅத் கிளை சார்பில், முகாம் நடந்தது. கிளை தலைவர் அன்சர், செயலாளர் அப்பாஸ், பொருளாளர் ஜெ.அப்பாஸ் ஆகியோர் முன்னிலையில் நடந்த முகாமில், இளைஞர்கள் ரத்ததானம் அளித்தனர். அவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.