/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாறைக்குழியில் மூழ்கிய மாணவன் சடலம் மீட்பு
/
பாறைக்குழியில் மூழ்கிய மாணவன் சடலம் மீட்பு
ADDED : நவ 24, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்; திருப்பூர், காந்தி நகரை சேர்ந்தவர் திருமலைசாமி; பனியன் தொழிலாளி.
இவரது மகன் அஜய், 13; பத்மாவதிபுரம் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் நண்பர் களுடன் பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் உள்ள பாறைக்குழிக்கு குளிக்க சென்றார். குளிக்கும்போது, அஜய் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கி இறந்தார். தீயணைப்புத்துறையினர் நேற்று காலை சிறுவனின் சடலத்தை மீட்டனர்.