sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

/

 கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

 கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

 கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்


ADDED : நவ 20, 2025 05:09 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், பல்லடம் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று இ-மெயிலில், வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையறிந்த, திருப்பூர் மாநகர வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாயுடன் அனைத்து தளங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆக. 28ம் தேதி இதேபோல் மிரட்டல் வந்த நிலையில், தற்போது, இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

போலீசார் கூறியதாவது:

இ-மெயில் வாயிலாக, கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காலை, 10:30 மணியளவில், பத்து இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடிக்க உள்ளதாகவும், உடனடியாக அனைவரும் வெளியேற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக சோதனை செய்த போலீசார் எதையும் கண்டுபிடிக்கவில்லை. புரளி என்பது தெரிந்தது. கடந்தமுறை ரஷ்யன் சர்வரில் இருந்து மெயில் அனுப்பபட்டது. தற்போது, 'டார்க் வெப்'பில் இருந்து அனுப்பியுள்ளனர். இதனை கண்டறிவதில் பல்வேறு சிக்கல் உள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us