ADDED : ஜூன் 29, 2026 11:24 PM
திருப்பூர்: நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ஆண்டுதோறும் ஜூன் 30-ம் தேதி 'சர்வதேச நாடாளுமன்ற தினம்' கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், புவியியல் ரீதியாக திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கோவை என 4 நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகளுக்குள் பிரிந்திருக்கிறது. மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது இந்த நான்கு எம்.பி.க்களின் கூட்டுப் பங்களிப்பை பொறுத்தே அமைகிறது.
திருப்பூர் தொகுதி: பின்னலாடைத் தொழிலுக்கான நுால் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் அழுத்தம் கொடுப்பது, சிறு, குறு நிறுவனங்களுக்கு 'முத்ரா' கடன்களை எளிதாக்குவது மற்றும் தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. மருத்துவமனை வசதிகளை மேம்படுத்துவது.
நீலகிரி தொகுதி (அவிநாசி): அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் முழுமையான செயல்பாட்டைக் கண்காணிப்பது மற்றும் விவசாயிகளின் பாசன நீர் தேவைகளை நாடாளுமன்றத்தில் ஒலிப்பது.
ஈரோடு தொகுதி (காங்கயம், தாராபுரம்): காங்கயம் காளைகள் பாதுகாப்பு, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் மற்றும் கொப்பரைத் தேங்காய்க்கு நியாயமான விலை பெற்றுத் தருவது.
கோவை தொகுதி (பல்லடம்): நுால் மற்றும் மின்கட்டண உயர்வால் முடங்கியுள்ள விசைத்தறித் தொழிலைக் காப்பது, குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவது மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க 'பல்லடம் வெளிவட்ட சாலை' திட்டத்தை விரைந்து முடிப்பது.
தொகுதி எல்லைகள் வேறாக இருந்தாலும், திருப்பூர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி, சாயக்கழிவு நீர் மேலாண்மை, தொழிலாளர் நலன் போன்ற பொதுவான பிரச்னைகளில் இந்த நான்கு எம்.பி.க்களும் கட்சிப் பாகுபாடின்றி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே அரசியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
