sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்; வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டு சிறை

/

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்; வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டு சிறை

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்; வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டு சிறை

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்; வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டு சிறை


ADDED : செப் 24, 2024 07:11 AM

Google News

ADDED : செப் 24, 2024 07:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தாராபுரம் கோவிந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வராஜ், 60. இவர் தந்தை பெயரில் இருந்த விவசாய நிலத்துக்கு, விவசாயத்துக்கான இலவச மின் இணைப்பு பெற, 1990ம் ஆண்டு விண்ணப்பித்தார்.

கடந்த 2009ம் ஆண்டு, மின் இணைப்பு பெற கட்டணம் செலுத்த மின் வாரியம் கடிதம் அனுப்பியது. மின் இணைப்பு பெறும் நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய மின் வாரியத்தினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, பட்டா பெயர் மாறுதல் செய்ய, கோவிந்தாபுரம் வி.ஏ.ஓ., திருமலைசாமி, 54, என்பவரை அணுகினார். அவர், பட்டா மாறுதல் செய்ய 5,000 ரூபாய் லஞ்சமாக கேட்டார். 2009 ஜன., 6ம் தேதி, லஞ்ச பணத்தை பெறும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் திருமலைசாமியை கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார்.

நீதிபதி செல்லதுரை நேற்று அளித்த தீர்ப்பில், திருமலைசாமிக்கு, 3 ஆண்டு சிறை தண்டனையும், 4,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.






      Dinamalar
      Follow us