sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிரகாசமான எதிர்காலத்துக்கு பிரைட் பப்ளிக் பள்ளி இருக்கு!

/

பிரகாசமான எதிர்காலத்துக்கு பிரைட் பப்ளிக் பள்ளி இருக்கு!

பிரகாசமான எதிர்காலத்துக்கு பிரைட் பப்ளிக் பள்ளி இருக்கு!

பிரகாசமான எதிர்காலத்துக்கு பிரைட் பப்ளிக் பள்ளி இருக்கு!


ADDED : மே 20, 2025 12:31 AM

Google News

ADDED : மே 20, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர், காங்கயம் ரோடு, விஜயாபுரம் பிரிவு, பிரைட் பப்ளிக் பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி ஒவ்வொரு ஆண்டும் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. இப்பள்ளி மாணவி ஷஹினா, 500க்கு, 488 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி ரிதமிகா, 484 மதிப்பெண் பெற்று, 2வது இடம்.

மாணவி தர்ஷினி, 483 பெற்று மூன்றாமிடம். மேலும், 475க்கு மேல், நான்கு பேரும், 450க்கு மேல் ஒன்பது பேரும், 400க்கு மேல், 11 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாணவர் முகேஷ் கண்ணா கணிதத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார். பள்ளியில், தேர்வெழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி ஷஹிவானுக்கு, அன்பு அறக்கட்டளை தலைவர் வக்கீல் மோகன் கேடயம் வழங்கி, பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கினார்.

சாதனை படைத்த அனைத்து மாணவ, மாணவிகளையும் அறக்கட்டளையின் தலைவர் வக்கீல் மோகன், துணை தலைவர் உத்தமன், பொருளாளர் பாலசுப்ரமணியம், பள்ளி அறங்காவலர்கள், பள்ளியின் துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us