/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருகும் தென்னை மரங்கள்; கண்ணீரில் விவசாயிகள்
/
கருகும் தென்னை மரங்கள்; கண்ணீரில் விவசாயிகள்
ADDED : ஜூலை 24, 2025 11:37 PM

பொங்கலுார்; தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு வெளுத்து வாங்குகிறது. பி.ஏ.பி., தொகுப்பு அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம் ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, உபரி நீர் அரபிக் கடலை நோக்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பாசனப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே பாசனம் நடக்கிறது. இரண்டாண்டு முன் பாசனம் நடைபெற்ற பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்கள் தன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றன.
இரண்டு தலைமுறைகளைக் கடந்த தென்னை மரங்களும் கூட இனி உயிருடன் இருக்காது என்ற சூழல் நிலவுகிறது. சிறந்த நீர் நிர்வாகத்தை அரசு ஏற்படுத்தி இருக்குமேயானால் இது போன்ற அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருக்க மாட்டார்கள். இதனால் பல லட்சம் ரூபாயை ஒவ்வொரு விவசாயிகளும் இழந்துள்ளனர். அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே இந்த துயரநிலை ஏற்பட்டு இருக்கிறது என்று விவசாயிகள் குமுறுகின்றனர்.