/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீயாய் எரியும் பிரச்னை; குப்பை கொட்ட எதிர்ப்பு: மறியல் செய்த 170 பேர் கைது
/
தீயாய் எரியும் பிரச்னை; குப்பை கொட்ட எதிர்ப்பு: மறியல் செய்த 170 பேர் கைது
தீயாய் எரியும் பிரச்னை; குப்பை கொட்ட எதிர்ப்பு: மறியல் செய்த 170 பேர் கைது
தீயாய் எரியும் பிரச்னை; குப்பை கொட்ட எதிர்ப்பு: மறியல் செய்த 170 பேர் கைது
ADDED : ஆக 20, 2025 01:16 AM

திருப்பூர்; திருப்பூர் அருகே ஊத்துக்குளி, வெள்ளியம்பாளையத்தில் மாநகராட்சி குப்பையை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 20 பெண்கள் உட்பட, 170 பேரை குண்டுகட்டாக போலீசார் துாக்கி சென்று கைது செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி சேகரமாகும் குப்பையை கொட்டுவதற்கு பாறைக்குழியை தேடி அதிகாரிகள் அலைந்து வருகின்றனர். தேங்கி கிடக்கும் குப்பையை கொட்ட செல்லும் இடம் எல்லாம் மக்கள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்பு வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடுகின்றனர். குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த, இரு வாரமாக நகரின் பல இடங்களில் மலை போல் குப்பை தேங்கியுள்ளது. அவ்வகையில், இதுநாள் வரை, 20 ஆயிரம் டன் குப்பை அப்புறப்படுத்த முடியாமல் தேங்கி கிடப்பதாக அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மக்கள் போராட்டம்
இந்நிலையில், மாநகராட்சி குப்பையை ஊத்துக்குளி தாலுகா, வெள்ளியம்பாளையம் ஊராட்சியிலுள்ள பயன்பாடற்ற பாறைக்குழியில் கொட்ட, லாரிகள் சென்றது. இதனையறிந்த மக்கள் லாரிகளை சிறை பிடித்து விஜயமங்கலம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊத்துக்குளி போலீசார், ஆர்.டி.ஓ., மோகன சுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
அதில், உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக் கட்டாக வாகனங்களில் ஏற்றினர். இருதரப்புக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நடந்தது. போலீசார் நடவடிக்கை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மொத்தம், 170 பேரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்து, மாலையில் விடுவித்தனர்.
கடந்த, இரு வாரமாக நகரின் பல இடங்களில் மலை போல் குப்பை தேங்கியுள்ளது. அவ்வகையில், இதுநாள் வரை, 20 ஆயிரம் டன் குப்பை அப்புறப்படுத்த முடியாமல் தேங்கி கிடப்பதாக அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்