sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி ஜரூர்: நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு

/

பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி ஜரூர்: நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு

பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி ஜரூர்: நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு

பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி ஜரூர்: நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு


ADDED : நவ 07, 2025 09:42 PM

Google News

ADDED : நவ 07, 2025 09:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னத்துார்: குன்னத்துாரில் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம், குன்னத்துார் பஸ் ஸ்டாண்ட் கட்டடம் மிகவும் சிதிலமடைந்ததால், புதிய கட்டடம் கட்ட பேரூராட்சி நிதியில் ஒரு கோடி ரூபாய் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 2 கோடியே 46 லட்சம் ரூபாய் என மொத்தம், 3.46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 11 கடைகள், தாய்மார்கள் பாலுட்டும் அறை, போக்குவரத்து அலுவலர்களுக்கான அறை, நவீன குளியலறையுடன் கூடிய கழிப்பறை ஆகியன பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கட்டப்படுகிறது.

இதற்காக பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருவதால், 'ஒரு ஆண்டுக்குள் புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வரும்,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிழற்குடை வசதி மக்கள் கோரிக்கை குன்னத்துாரில் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நடந்து வருவதால், பஸ் அனைத்தும், ரோட்டிலேயே நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றனர். இதுதவிர, பயணிகள் நின்று பஸ் ஏற போதிய நிழற்குடை வசதி இல்லை. இதனால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் நின்று பஸ் ஏறி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டு க்கு வரும் வரை, தற்காலிக நிழற்குடை அமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us