sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தாய்நாட்டை காத்த வீரர் கரங்களில் பஸ் ஸ்டாண்ட் பாதுகாப்பு பணி

/

தாய்நாட்டை காத்த வீரர் கரங்களில் பஸ் ஸ்டாண்ட் பாதுகாப்பு பணி

தாய்நாட்டை காத்த வீரர் கரங்களில் பஸ் ஸ்டாண்ட் பாதுகாப்பு பணி

தாய்நாட்டை காத்த வீரர் கரங்களில் பஸ் ஸ்டாண்ட் பாதுகாப்பு பணி


ADDED : அக் 02, 2024 06:41 AM

Google News

ADDED : அக் 02, 2024 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், காமராஜ் ரோட்டில், மாநகராட்சிக்குச் சொந்தமான மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகம் அமைந்துள்ளது.

பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கடைகள் முன் ஆக்கிரமிப்பு, போதை ஆசாமிகள் நடமாட்டம், பஸ் தாறுமாறாக நிறுத்துவது, இரு, நான்கு சக்கர வாகனங்களை இஷ்டம் போல் நிறுத்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இது குறித்த தொடர் புகார்களின் பேரில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதனடிப்படையில் தற்போது, தனியார் செக்யூரிட்டி நிறுவனம் சார்பில், முன்னாள் ராணுவத்தினர் எட்டு பேர் இங்கு தற்போது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக இவர்கள் அனைவரும் காலை முதல் மாலை வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us