sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஆபத்தான நிலையில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை

/

 ஆபத்தான நிலையில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை

 ஆபத்தான நிலையில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை

 ஆபத்தான நிலையில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை


ADDED : டிச 08, 2025 05:45 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை எலையமுத்துார் பிரிவு பஸ் ஸ்டாபில் உள்ள, பயணியர் நிழற்கூரை பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.

உடுமலை - தளி ரோட்டில், எலையமுத்துார் பிரிவு பஸ் ஸ்டாப் பகுதியில், பயணியர் வசதிக்காக நிழற்கூரை அமைக்கப்பட்டது. நிழற்கூரை கட்டடம் பராமரிப்பின்றி, சிதிலமடைந்தும், புதர் மண்டியும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

அரசு கல்லுாரி, கோட்டாட்சியர் அலுவலகம், போக்குவரத்து துறை அலுவலகம், அரசு மாணவ, மாணவியர் விடுதி, தனியார் பள்ளிகள் அமைந்துள்ள நிலையில், ஏராளமான பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் இந்த பஸ் ஸ்டாப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

மூன்று ரோடு சந்திப்பு பகுதியில், ரோட்டின் மத்தியில் ஆபத்தான நிலையில் பயணியர் காத்திருக்கின்றனர். வெயில், மழையிலும் காத்திருக்கும் நிலைக்கு தீர்வு காண, பஸ் ஸ்டாப் நிழற்கூரையை பயன்படுத்தும் வகையில், புதுப்பிக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us