sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

/

நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஜூலை 18, 2025 12:14 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 15ம் தேதி , விண்ணப்பிக்க கடைசி நாள்.

இது குறித்து, கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:

ரசாயனம், உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல், இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு, மண் வளத்தையும் பாதுகாப்பது, உயிர்ம வேளாண்மை. இதனால், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், அங்கக கழிவுகளை நன்றாக மட்கச் செய்து, அவற்றிலுள்ள ஊட்டச்சத்துக்களை மண்ணுக்கு அளிக்கிறது; பயிர்கள் கிரகித்துக்கொள்ள உதவுகின்றன.

நுண்ணுயிர்கள், ஊட்டச்சத்துகளை மெதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன. மாசற்ற சூழலில் பயிர் வளர்வதால், நச்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்யமுடியும்.

வேளாண் துறை மூலம், நடப்பாண்டில் உயிர்ம வேளாண் நடைமுறைகளை பின்பற்றி, சிறப்பாக செயல்படும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெற விரும்பும் விவசாயிகள், 'அக்ரிஸ் நெட்' இணையதளத்தில், வரும் செப். 15 ம் தேதிக்குள் பதிவு கட்டணம், ரூ.100 செலுத்தி, விண்ணப்பிக்கவேண்டும்.

தகுதிகள் என்னென்ன?


குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் விவசாய பயிர்கள் சாகுபடி செய்திருக்கவேண்டும். முழு நேர இயற்கை வேளாண் விவசாயியாக இருக்கவேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள், இயற்கை வேளாண் உற்பத்தியில் ஈடுபட்டிருக்க வேண்டும்; உயிர்ம வேளாண்மைக்கான சான்று பெற்றிருக்கவேண்டும்.

மாவட்ட அளவிலான மதிப்பீட்டுக்குழு மற்றும் மாநில அளவிலான தேர்வுக்குழு மூலம், வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

வெற்றிபெறும் மூன்று விவசாயிகளுக்கு, தமிழக அரசு சார்பில், தலா 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கத்துடன், சிறந்த உயிர்ம உழவருக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.

இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us