/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டப்பகலில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு
/
பட்டப்பகலில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு
ADDED : டிச 11, 2025 06:35 AM
தாராபுரம்: தாராபுரம் அருகே, பட்டப்பகலில் சாலையில் சென்ற காரில் தீப்-பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் ஹாசிக் காதர், 30. இவரும், தாராபுரம் நான்கு சக்கர ஷோரூமில் பணிபுரியும் மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த காளிதாஸ், 30, என்-பவரும் ரெனால்ட் லோகன் காரில் நேற்று காலை, 10:45 மணிய-ளவில் கோவை நோக்கி சென்றனர். தாராபுரம் அடுத்த காதப்புள்-ளபட்டி டோல்கேட் அருகே சென்றபோது, காரில் இருந்த புகை வந்தது. அதிர்ச்சியடைந்த இருவரும், உடனடியாக காரை நிறுத்தி விட்டு, இறங்கினர்.சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து குபுகுபுவென எரிய ஆரம்பித்-தது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிர்ச்-சியடைந்தனர். அவர்கள் கையில் இருந்த மொபைல்போனில், கார் எரிவதை வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்-டனர். இந்நிலையில், அங்கு சென்ற தாராபுரம் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில், கார் முற்றிலும் எரிந்து சேதமானது. குண்டடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

