/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேவல் வைத்து சூதாட்டம் ஊராட்சி செயலர் மீது வழக்கு
/
சேவல் வைத்து சூதாட்டம் ஊராட்சி செயலர் மீது வழக்கு
சேவல் வைத்து சூதாட்டம் ஊராட்சி செயலர் மீது வழக்கு
சேவல் வைத்து சூதாட்டம் ஊராட்சி செயலர் மீது வழக்கு
ADDED : ஜன 18, 2026 05:32 AM
பல்லடம்: பல்லடம் அருகே, சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலர் உட்பட, 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பல்லடத்தை அடுத்த, செம்மிபாளையத்தில் சேவல் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட பல்லடம் போலீசார், செம்மிபாளையம் ஊராட்சி செய லர் உட்பட, 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சுக்கம்பாளையத்தை சேர்ந்த பிரபு விஜயகுமார், 32, மணிகண்டன் 35, குணசேகரன், 30, துர்க்கை வேலன், 37, கோகுல்நாத், 27, பிரவீன் குமார், 23 ஆகிய ஆறு பேர் மீதும் வழக்கு பதியப்பட்டது. சூதாட்டத்துக்காக பயன்படுத்திய, ஒரு கார் உட்பட, 9 டூவீலர் மற்றும் 500 ரூபாய் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இதில், பிரபு விஜயகுமார், செம்மிபாளையம் ஊராட்சி செயலாளராக உள்ளார். இவரது தோட்டத்தில்தான் சூதாட்டம் நடந்துள்ளது.
அரசுப் பணியில் உள்ளவர் சூதாட்டத்தில் ஈடுபட்டு சிக்கியது செம்மிபாளையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

