sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நுாற்றாண்டு விழா

/

சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நுாற்றாண்டு விழா

சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நுாற்றாண்டு விழா

சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நுாற்றாண்டு விழா


ADDED : நவ 25, 2024 06:20 AM

Google News

ADDED : நவ 25, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; பேரூர் ஆதீனம், 24ம் பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நுாற்றாண்டு விழா, செஞ்சேரிமலை நந்தவன திருமடத்தில் நடந்தது.

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார், வரன்பாளையம் திருநாவுக்கரசர் திருமடம் மவுன சிவாச்சல அடிகளார், முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார் வரவேற்றார்.

முன்னதாக, சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் உருவப்படத்துக்கு மலர் துாவி வழிபாடு நடந்தது. ஆன்மீகப் பேச்சாளர் அனந்த கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். ஆதீனங்கள் ஆசியுரை வழங்கினர். பேரூர் அடிகளார் மருத்துவமனைக்கு, திருமடத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கினார்.

பள்ளி குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை முக்கிய பிரமுகர்கள் செந்தில் நாதன், மந்தராச்சலம், ஈஸ் வரமூர்த்தி ஆகியோர் வழங்கினர்.

பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. தண்டபாணி சுவாமிகள், ராமானந்த குமரகுருபர அடிகளார், செஞ்சேரிமலை திருமடத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us