/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிப். 1ல் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல்; மகிழ்ச்சி 'பொங்குமா?' புதிய திட்டங்களை எதிர்நோக்கும் திருப்பூர்
/
பிப். 1ல் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல்; மகிழ்ச்சி 'பொங்குமா?' புதிய திட்டங்களை எதிர்நோக்கும் திருப்பூர்
பிப். 1ல் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல்; மகிழ்ச்சி 'பொங்குமா?' புதிய திட்டங்களை எதிர்நோக்கும் திருப்பூர்
பிப். 1ல் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல்; மகிழ்ச்சி 'பொங்குமா?' புதிய திட்டங்களை எதிர்நோக்கும் திருப்பூர்
ADDED : ஜன 14, 2026 06:30 AM

திருப்பூர்: மத்திய பட்ஜெட், வரும் பிப்., 1 ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதால், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர், தங்களது பிரதான கோரிக்கையை சமர்ப்பித்து வருகின்றனர். திருப்பூர் பனியன் தொழில் என்பது, சுயம்புவாக வளர்ந்த விருட்சம் என்று, மூத்த தொழில்துறையினர் கூறுவர். வேர்விட்டு வளரும் வரை, சுய முயற்சியால் தொழில்துறையினர் வளர்த்தனர். அதன்பின், ஒவ்வொரு சவால்களை எதிர்கொண்ட போதுதான், மத்திய, மாநில அரசுகளின் உதவி தேவைப்பட்டது; அன்னிய செலாவணியை ஈட்டித்தந்த தொழில் என்பதால், அரசுகளும் தங்கள் பங்கிற்கு தாராளமாக உதவி செய்தன.
உள்நாட்டு சந்தையில் பெரிய சவால்கள் ஏற்படுவதில்லை. ஏற்றுமதி வர்த்தகத்தில், வளர்ந்த நாடுகளுடன் போட்டியிட்டு, போட்டிநாடுகளின் கடும் போட்டியை சமாளித்த வர்த்தகம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. சிறிய நாடுகளும் நம்மைவிட பலம் வாய்ந்த சந்தைகள் ஏராளமாக உள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக, வங்கதேசம் கடும் போட்டியை உருவாக்கி வருகிறது.
இவ்வாறு, சர்வதேச சந்தைகளில் உருவாகும் போட்டியை எதிர்கொள்ள, மத்திய அரசின் உதவி கட்டாயமாகிறது. ஒவ்வொரு ஆண்டும், மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கு முன், தொழில்துறையினரின் கருத்துக்களை அரசு கேட்டு பெறுகிறது. தொழில் அமைப்பினர், தங்களது கோரிக்கையை கடிதமாகவும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், 2026 - 27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், வரும் பிப். 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல் செய்ய இரண்டு வாரம் மட்டுமே இருப்பதால், தொழில் அமைப்பினர், தங்களது கோரிக்கையை அரசுக்கு அனுப்பி வருகின்றனர். குறிப்பாக, 'ஏ-டப்' என்ற தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்தை கட்டாயம் நீட்டிக்க வேண்டுமென, கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

