/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெற்றி வாகை சூடிய 'செஞ்சுரி' மாணவர்கள்
/
வெற்றி வாகை சூடிய 'செஞ்சுரி' மாணவர்கள்
ADDED : அக் 25, 2025 01:24 AM

திருப்பூர்: திருப்பூர் டீ பப்ளிக் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில் செஞ்சுரி பள்ளி மாணவர்கள் பல்வேறு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றனர்.
14 வயதினர் பிரிவில் முகமது அபாயன் - 100 மீ., ஓட்டத்திலும்; 17 வயதினர் பிரிவில் சஞ்சய் உயரம் தாண்டுதலிலும்; சபரிஷ் 110 மீ., தடை தாண்டும் போட்டியிலும்; 19 வயதினர் பிரிவில்ஷர்வந்த் கோலுான்றித் தாண்டும் போட்டியிலும் வெள்ளிப்பதக்கம் வென்றனர். 19 வயதினர் மாணவியர் பிரிவில் லிதன்யா 100 மீ., ஓட்டத்தில் தங்கம், நீளம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார்.
அதேபிரிவில் அஷ்மிதா 100 மீ., தடை தாண்டும் ஓட்டம் மற்றும் உயரம் தாண்டுதலில் வெள்ளி, 300 மீ., தடைதாண்டும் ஓட்டத்தில் வெண்கலம் பெற்றார். இவர்கள் மாநில தடகளப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
இவர்களையும், பயிற்சியாளர் குணசீலனையும் தாளாளர் சக்திதேவி, முதல்வர் ெஹப்சிபா பால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

