/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பட்டய கணக்காளர் சேவை முக்கியமானது'
/
'பட்டய கணக்காளர் சேவை முக்கியமானது'
ADDED : பிப் 27, 2026 07:11 AM

திருப்பூர்: இந்திய பட்டய கணக்காளர் கழகம் (ஐசிஏஐ), தெற்கிந்திய பிராந்திய கவுன்சில் (எஸ்ஐஆர்சி.) திருப்பூர் கிளையின், 2026 - 2027ம் ஆண்டிற்கான, நிர்வாக அலுவலர்கள் பதவியேற்பு விழா, திருப்பூர் கிளை பெத்திசெட்டிபுரம் வளாகத்தில் நடந்தது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், ''தொழில்துறை வளர்ச்சியில், பட்டய கணக்காளர்கள் வழங்கும் தொழில்முறை சேவை முக்கியமானது,'' என்றார்.
ஐ.சி.ஏ.ஐ. மத்திய கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், புதிய நிர்வாக குழுவினருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
எஸ்.ஐ.ஆர்.சி. முன்னாள் தலைவர் ஜலபதி, ஐ.சி.ஏ.ஐ. திருப்பூர் கிளை முன்னாள் தலைவர் சிவாச்சலம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.
எஸ்.ஐ.ஆர்.சி. பிராந்திய கவுன்சில் உறுப்பினர் அருண், ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
2026 - 2027ம் ஆண்டிற்கான நிர்வாக அலுவலர் குழு தலைவராக விஷ்ணுகுமார், துணை தலைவராக ஹரிசங்கர், செயலாளராக சபரீஷ், பொருளாளராக ராகவேந்தர், எஸ்.ஐ.சி.ஏ.எஸ்.ஏ. தலைவராக ஸ்ரீ விக்னேஷ், உடனடி முன்னாள் தலைவராக தருண் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
'கிளையின் செயல் பாடுகளை வலுப் படுத்தி, உறுப்பினர்களின் தொழில்முறை முன்னேற்றத்திற்கு திட்டமிட்டு செயல்படுவோம்' என புதிய நிர்வாகிகள் உறுதியளித்தனர்.

